"வருமான வரித்துறை தினகரனை பணிய வைக்க முயற்சிக்கிறது"

டிடிவி தினகரனை அடிபணிய வைக்க நெருக்கடி அளிக்கும் வகையில் மாநில அரசின் துணையோடு வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருவதாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை நாடாளுமன்ற உறுப்பினரும்,டிடிவி தினகரன் ஆதரவாளருமான ஏ.பி. நாகராஜ் கோவில்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர் சந்தித்தார் அப்போது பேசிய அவர்,தமிழ்நாட்டில் அம்மா பிம்பத்தை சிதைக்கும் முயற்சியின் ஒரு நடவடிக்கையாக அதிமுக பிளவுபடுத்தப்பட்டதாகவும், அதிமுக கட்சியை அழிக்கும் நடவடிக்கைக்கு பலரும் துணை போனதாகவும் தெரிவித்தார்.

சசிகலா குடும்பம் இருந்தால் கட்சி பலப்பட்டு விடும் என்பதாலும், சசிகலா ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அதிமுக பிளவுபட்டு விடுமென்பதாலும்,தான் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவதாக கூறிய அவர், நீதித்துறையை தவிர்த்த அனைத்து துறைகளும் அரசின் கைப்பாவைகளாக மாறிவிட்டதாக தெரிவித்தார்.

கடந்த ஒராண்டில் பல வருமான வரித்துறை சோதனைகள் நடந்தாலும், வேண்டப்பட்டவர்களுக்கு வேண்டியவர்கள் என்பதால் எந்த நடவடிக்கையும் இல்லை என கூறிய அவர், சேகர்ரெட்டி உள்ளிட்டோரிடம் நடத்தப்பட்ட சோதனை எதற்காக நடத்தப்பட்டது? என்ன ஆனது? என கேள்வி எழுப்பினார்.

இந்த வருமான வரித்துறை சோதனை மாநில அரசின் துணையோடு நடைபெறுவதாகவும், டிடிவி தினகரனை அடிபணிய வைக்க நெருக்கடி அளிக்கப்பட்டு வருவதாகவும், வருமான வரித்துறை மிரட்டலுக்கான கருவியாக பயன்படுத்தப்படுகிறது எனவும் நாகராஜ் தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை கைப்பற்றும் முயற்சியாக கூட இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கலாம் என தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...